லொல்லுசபா மனோகரும் தல பாலபாரதியும் - பா.க.ச போட்டிக்கு [#24]

நம்ம லொல்லுசபா மனோகருக்கும் வலைப்பூ தொடங்க ஆசை வந்து விட நம்ம தல பாலபாரதியிடம் போறாரு நம்ம மனோகரு. அங்க என்ன நடக்குது, இதோ. . . . .

சார் எனக்கும் வலைப் பூ தொடங்கி வலைப் பதிவு எழுதனும்னு ஆசை எனக்கு கொஞ்சம் உதவி பண்றீங்களா. . . .

நீங்க வலைப்பதிவு ஆரம்பிக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு, டி.வி.ல சிரிக்க வைக்கிற மாதிரி பதிவுலயும் எல்லோரையும் சிரிக்க வைக்கனும். என்ன உதவி வேணும்னாலும் செய்யுறேன். . .

சார் எனக்கு கம்ப்யூட்டர் பத்தி ஒன்னும் தெரியாதும், நீங்கதன் ஆரம்பத்துலேர்ந்து சொல்லி தரணும்.

கண்டிப்பா சொல்லித்தறேன். நிங்க பிளாக்கர்ல பதியனும்னா உங்களுக்கு கூக்குள்ள அக்கவுண்ட் இருக்கனும், உங்களுக்கு கூகுள்ள அக்கவுண்ட் இருக்கா. . . .

எனக்கு பக்கத்து டீ கடைல அக்கவுண்ட் இருக்கு, அத வச்சு ஆரம்பிக்கலாமா. . . .

(டீவி ல பண்ற மாதிரியே பண்றானே. . . என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு)

டீக்கடை அக்கவுண்ட வச்சு பதிவு எழுத முடியாது, கூகுள்ள அக்கவுண்ட் ஓபன் பண்ணனும், நானே உங்களுக்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணி தரேன். . . .

அப்புடியே அந்த அக்கவுண்ட்ல 500 ஓ 1000 மோ போட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியாமா போகும். . . . .

ங்கொய்யால, என்ன ஓவரா எடக்கு மடக்கா பேசுற, பேசாம இரு என்று தல மனோகர் தலைல தட்ட அமைதியாகிறார்.

தல ரொம்ப நேரம் கஷ்டப் பட்டு எல்ல வேலைகளையும் முடித்து விட்டு, எப்படி பதிவு எழுதுவது என எல்லாவற்றையும் பொருமையாக விளக்குகிறார்.

இவ்வளவு ஆர்வமா, பதிவு எழுத ஆசப்படுறீங்களே பதிவுல என்னென்ன எழுதப் போறீங்க. . . .

அது ஒன்னும் இல்ல சார், இங்க பாலாபாய் பாலாபாய்ன்னு ஒருத்தர் இருக்காராமே, அவர காலாய்க்கறதுக்கு பா.க.ச ன்னு சங்கமே வச்சு அவர கலாய்க்கிறாங்களாமே அவர கலாய்க்கதான் இந்த ஏற்பாடு. . . .

என்னது என்று தல நெஞ்சைப் பிடித்துக் கொள்ள.

ஜெய் சங்கர் ன்னு ஒருத்தர் வந்தாரு, எத்தன நாளைக்கு தான் சபாவுல (லொல்லு சபா) இருந்துகிட்டு சினிமா நட்சத்திரங்கள கலாய்ப்பீங்க , எங்க சங்கத்துல சேர்ந்து பதிவுலக நட்சத்திரம் பாலாபாயை கலாய்ங்கன்னு சொன்னார். எனக்கு பதிவ பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு சொன்னேன், அவ்ரு தான் உங்க அட்ரச கொடுத்து இவர போய் பாரு வலைப் பதிவு ஆரம்பிக்க வழி சொல்லுவார்னு சொன்னார்.

ரொம்ப நன்றி சார், பா.க.ச போட்டில எனக்கு பரிசு கிடைக்கனும்னு வாழ்த்துங்க சார் என்று மனோகர் கூற

ங்கொய்யால என்று நம்ம ஜெய்யை கொலைவெறியோடு்யோடு தேடுகிறார் தல. . . . . .

14 Comments:

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர் வெங்கட், கலக்கிட்டீங்க.

எனக்கும் எங்கு பதிவது என்று தெரியவில்லை:( யாரிடம் கேட்பது பேசாம பால பாய்கிட்டயே கேட்டுவிடலாமா?:))))

said...

போட்டுக்கொடுத்திட்டயே பறட்ட..

Anonymous said...

ரெண்டு பேரும் பேசுற மாதிரி கற்பனை பண்ணி படிச்சுட்டே வந்து, கடைசியில் அடக்க மாட்டாம, பலமா சிரிச்சுட்டேன்.

பரிசு பெற வாழ்த்துக்கள்!!!!!!

said...

நன்றி குசும்பன்.

said...

வாங்க ஜெய் அண்ணா. . .

/////போட்டுக்கொடுத்திட்டயே பறட்ட..

என் தல பறட்டைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்.

said...

///////////பரிசு பெற வாழ்த்துக்கள்!!!!!!

வாழ்த்துக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி வெயிலான்.

said...

:)

சூப்பர்!

ரொம்பவும் ரசிச்சேன்!

நல்ல கற்பனை!


(வாழ்த்துக்கள்! தல பால பாரதி சார்பா)

said...

:)

எனக்கென்னவோ தலையோட விளக்கமெல்லாம் கேட்டு லொள்ளு சபா மனோகர் தான் தலை தெறிக்க ஓடி இருப்பார்னு தோணுது.

:)

said...

நன்றி நாமக்கல் சிபி.

///வாழ்த்துக்கள்! தல பால பாரதி சார்பா

தல இத படிச்சிருப்பாரா. . . ?

said...

***************************
எனக்கென்னவோ தலையோட விளக்கமெல்லாம் கேட்டு லொள்ளு சபா மனோகர் தான் தலை தெறிக்க ஓடி இருப்பார்னு தோணுது.
***************************

ஆகா இது நல்லா இருக்கே. . .

மிக்க நன்றி அரைபிளேடு. . . .

said...

மொதல உறுப்பினர் ஆக சொல்லுங்க தல ரெத்தத்தால கையெழுத்து பணமுடிப்பு எல்லாம் தருவாரு

:)

said...

ங்கொய்யால சூப்பர்! சூப்பர்! சூப்பர்!

said...

மின்னுது மின்னல்
சீக்கிரம் உறுப்பினர் ஆகனும்.

said...

வாங்க இம்சை


மின்னுது மின்னல், இம்சை வருகைக்கு நன்றி.

கோச்சுகாதீங்க, பின்னூட்டம் வந்ததையே மறந்துட்டேன். அதான் ரிலீஸ் பண்ண லேட்டா ஆயிடுச்சி. . . .

:-))))))))