9ம் சிரிப்பூ - (கடவுளும் மரம் வெட்டுபவனும்)

ஒரு சின்ன கதை. (இது பழைய கதை அல்ல).


ஒரு மரம் வெட்டுபவன், ஆற்றின் ஓரமாக மரம் வெட்டிக்கொண்டிருந்தான். அப்போது தற்செயலாக அவன் கோடாரி ஆற்றில் விழுந்து விட கடவுளை வேண்டுகிறான், "கடவுளே என் கோடாரியை எனக்கு கொடு" என்று. அப்போது கடவுள் ஆற்றில் தோன்றி ஒரு பொன்னால் செய்யப்பட்ட கோடாரியை அவனிடம் நீட்டுகிறார். இது தனதல்ல என்று அவன் மறுக்கிறான். மீண்டும் ஆற்றில் மூழ்கி வந்து ஒரு வெள்ளியால் ஆன கோடாரியை அவனிடம் நீட்ட, இதுவும் தனதில்லை என்று மறுக்கிறான். கடவுள் ஆற்றில் மூழ்கி அவனுடைய கோடாரியை நீட்ட சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறான். அவனின் நேர்மையில் மகிழ்ந்த கடவுள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன கோடாரிகளை அவனுக்கே பரிசாக வழங்கிவிட்டார்.

சில நாட்கள் கழித்து, தன் மனைவியோடு அதே ஆற்றங்கறையில் அவன் நடந்து செல்கிறான். அவன் மனைவி தற்செயலாக ஆற்றில் விழுந்து விட கடவுளை வேண்டுகிறான், "கடவுளே என் மனைவியை எனக்கு காப்பாற்றிக் கொடு" என்று. அப்போது கடவுள் Angelina Jolie வுடன் ஆற்றில் தோன்றி, இவள் தானே உன் மனைவி என்று கேட்கிறார். இவன் உடனே "ஆமாம் இவள் தான் என் மனைவி" என்கிறான். கோபமடைந்த கடவுள், "உண்மையை சொல் ? இவளா உன் மனைவி" என்கிறார்.

உடனே அவன், " இவ என் பொண்டாட்டி இல்லை என்பேன், உடனே வேற ஒரு பிகர காட்டுவீங்க,அவளும் இல்லன்னு நான் சொல்லுவேன், கடைசியில என் பொண்டாட்டிய காட்டி மூணு பேரையும் வச்சுக்கோன்னு சொல்லுவீங்க."

" ஒரு பொண்டாட்டிய வச்சுக்கிட்டே படாத பாடு படறேன், மூனையும் வச்சிக்கிட்டு நான் சாவறதா "


(மின்னஞ்சலில் வந்த கதையின் தமிழாக்கம்)

2 Comments:

said...

இது பழைய கதையா இருக்கும்...எல்லாமே வேனுமுன்னு அடம்புடிக்கறது தான் இப்போதைய பேஷன்.

said...

தல, உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சா.'
ஆனா இப்படி சொல்ல மாட்டீங்க.